top of page

Sri Gopu Sir


சமச்சீர் நிலை காட்டும் துலாக்கோல் போன்று கல்விப் பணியையும் இறைப்பணியையும் இரு கண்களாகப் பாவித்த, பட்டுக்கோட்டை கோபு சார் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட, ஸ்ரீ ராஜகோபால ஐயர் அவர்கள் தன் வாழ்க்கையையே ஒரு தவமாக வாழ்ந்தவர். இவருடைய தந்தையார் பட்டுக்கோட்டை ஸ்ரீ ராஜா சாஸ்திரிகள் திருவிடைமருதூர் வேத பாடசாலையில் பூரண அத்யைனம் செய்தவர். ஸ்ரீ கோபு சார் அவர்கள் தன் வாழ் நாளில் ஸ்ரீமத் பாகவதம் 56 முறைகளும். ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் 68 முறைகளும், நாராயணீய ராமாயண ப்ரவசனம் 125 முறைகளும் செய்தவர். அபிராமி அந்தாதிக்கு ஆங்கிலத்தில் மிக அருமையாகவும், எளிமையாகவும் பொருள் எழுதியுள்ளார். கல்விப் பணியில் சிறந்து விளங்கி நல்லாசிரியர் விருது பெற்றவர். இவருடைய துணைவியார் ஸ்ரீமதி லலிதா இவருக்கு உற்ற துணையாக இருந்து, இவரது சிறந்த அனுஷ்டான வாழ்க்கைக்கு உதவியவர். இப்போது இவரைப்பற்றி இவரது புதல்வர் ஸ்ரீ ராமக்ருஷ்ணன் அவர்கள் கூறுவதைக் கேட்போம்.

Courtesy: Smt. Malathi Jayaraman, Kumbakonam

Recent Posts

See All
விராடப் பர்வத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சமய அம்சங்கள்:பாகம் 2

(முன் தொடர்ச்சி.) மஹாபாரதம் எனும் இதிஹாசத்தின் அருமை பெருமைகளைப் பார்த்தோம் தொடர்ந்து இந்த அற்புதமான இதிஹாசத்தின் ஒரு பகுதியான விராட பர்வாவின் சிறப்பினைத் தெரிந்து கொள்வோம். 1. விராடப் பர்வம், மகாபா

 
 
 
விராடப் பர்வத்தின் முக்கியமான ஆன்மிக மற்றும் சமய அம்சங்கள்:பாகம் 1

ஶ்ரீ வால்மீகி முனிவர் அருளிய ஶ்ரீமத் ராமாயணம், அற்புதமான நடைமுறை இதிஹாசம். இக் காவ்யத்தின் மஹிமையே “பித்ரு வாக்கிய பரிபாலனம்” என்று பெருமை மிக்க “ தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, என்பதே. அரசனின் / அரச

 
 
 

Comments


bottom of page