top of page

Sri Ramanar's Shishyar

தேவராஜ முதலியார் அரசாங்க வக்கீலாகப் புகழ்பெற்று விளங்கியவர்


இவர் பகவான் ஸ்ரீ ரமணரின் ஆரம்பகாலச் சீடராவார்


இவர் ஒரு நாள் பகவானிடம் ஒரு சந்தேகம் கேட்டார்

ree

பகவானே அருணாசல மகாத்மியத்தில்

இந்த அருணாசலத்தைச் சுற்றி மூன்று யோசனை தூரத்திற்குள் வசிப்பவர்களுக்கு


நான் அவர்களது பாவங்களை எரித்து


அவர்களுக்கு மோக்ஷம் அளிக்கிறேன்


இங்கு வசிப்பவர்களுக்குக் குரு மூலம் தீக்ஷை பெற வேண்டிய அவசியமும் இல்லை


இது எனது ஆணை

என்று சிவபெருமான் வாக்காகக் கூறப்பட்டிருக்கிறதே


இது உண்மையாகவே சரிதானா ?


அதற்குப் பகவான் புன்முறுவலித்தபடி கூறினார்


முதலியார்வாள் !


இது சுப்ரீம் கோர்ட்டிலிருந்து வந்திருக்கும் தீர்ப்பு


இதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை


இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு கீழ்ப்படிய வேண்டியது தான்


சாக்ஷாத் சிவபெருமானை 'சுப்ரீம் கோர்ட்' என்று பகவான் வருணித்ததை முதலியார் மிகவும் சிலாகித்தார்


அவர்தான் அரசாங்க வக்கீல் ஆயிற்றே பகவானுடைய இந்த பதில் அவருக்குப் பரம திருப்தியை அளித்தது.

 
 
 

Comments


bottom of page