top of page

ஶ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்தோத்திரம்



பூஜ்யஶ்ரீ சங்கரவிஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய

ஶ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்தோத்திரம்


மொழிபெயர்ப்பு: பி.ஆர்.கண்ணன்



भजेऽहं भगवत्पादं भारतीयशिखामणिम् । अद्वैतमैत्रीसद्भावचेतनायाः प्रबोधकम् ॥१॥

பஜேஹம் பகவத்பாதம் பாரதீயஶிகாமணிம் | அத்வைதமைத்ரீஸத்பாவசேதநாயாஃ ப்ரபோதகம் ||1||


பாரதீயர்களின் சூடாமணியாகவும், அத்வைதத்தின் மூலம் நட்பு, நல்லுறவு எண்ணங்களை எழுப்புபவராகவும் உள்ள ஶ்ரீஆதிசங்கர பகவத்பாதர்களை நான் வணங்குகிறேன்.


अष्टषष्टितमाचार्यं वन्दे शङ्कररूपिणम् । चन्द्रशेखरयोगीन्द्रं योगलिङ्गप्रपूजकम् ॥२॥

அஷ்டஷஷ்டிதமாசார்யம் வந்தே ஶங்கரரூபிணம் | சந்த்ரஶேகரயோகீந்த்ரம் யோகலிங்கப்ரபூஜகம் ||2||


68வது ஆசாரியர்களான, ஸாக்ஷாத் சிவஸ்வரூபியான, யோகிகளில் சிறந்தவரும், யோகலிங்கத்தினை பூஜிப்பவருமான, ஶ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நமஸ்கரிக்கிறேன்.

(யோகலிங்கம் ஆதிசங்கரரால் கைலாஸத்தினின்று கொண்டுவரப்பட்ட ஐந்து சிவலிங்கங்களில் ஒன்று. அவரால் காஞ்சியில் சங்கர மடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.)


वरेण्यं वरदं शान्तं वदान्यं चन्द्रशेखरम् । वाग्मिनं वाग्यतं वन्द्यं विशिष्टाचारपालकम् ॥३॥

வரேண்யம் வரதம் ஶாந்தம் வதாந்யம் சந்த்ரஶேகரம் | வாக்மிநம் வாக்யதம் வந்த்யம் விஶிஷ்டாசாரபாலகம் ||3||


ஒளியிற் சிறந்தவரும், வரமருளுபவரும், சாந்தஸ்வரூபியும், கொடைவள்ளலும், வாக்குவன்மை மிக்கவரும், கட்டுப்பட்ட வாக்கினையுடையவரும், எல்லோராலும் வணங்கத்தக்கவரும், ஆசாரங்களைக் காப்பதில் விசேஷ ஆர்வம் கொண்டவருமான ஶ்ரீசந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நமஸ்கரிக்கிறேன்.


देवे देहे च देशे च भक्त्यारोग्यसुखप्रदम्। बुधपामरसेव्यं तं श्रीजयेन्द्रं नमाम्यहम् ॥४॥

தேவே தேஹே ச தேஶே ச பக்த்யாரோக்யஸுகப்ரதம்| புதபாமரஸேவ்யம் தம் ஶ்ரீஜயேந்த்ரம் நமாம்யஹம் ||4||


ஈஸ்வர பக்தி, தேக ஆரோக்கியம், தேசத்தில் சுகமான வாழ்வு ஆக்யவற்றை அருள்பவரும், சான்றோர் முதல் பாமரர் வரை எல்லோராலும் வணங்கப்படுபவருமான ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன்.


वृत्तवृत्तिप्रवृत्तीनां कारणं करणं प्रभुम् । गुरुं नौमि नताशेषनन्दनं नयकोविदम् ॥ ५ ॥

வ்ருத்தவ்ருத்திப்ரவ்ருத்தீநாம் காரணம் கரணம் ப்ரபும் | குரும் நௌமி நதாஶேஷநந்தநம் நயகோவிதம் || 5 ||


சரித்திரம் படைப்பவரும், நன் நடத்தை (அல்லது நல் தொழில்), நல்ல செயல்பாட்டினையும் அருள்பவரும், வணங்குபவர் அனைவரையும் மகிழ்விப்பவரும், நீதியை நயம்பட நடத்துபவருமான குரு ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன்.

प्रजाविचारधर्मेषु नेतारं निपुणं निधिम् । वन्देऽहं शङ्कराचार्यं श्रीजयेन्द्रसरस्वतीम् ॥ ६ ॥

ப்ரஜாவிசாரதர்மேஷு நேதாரம் நிபுணம் நிதிம் | வந்தேஹம் ஶங்கராசார்யம் ஶ்ரீஜயேந்த்ரஸரஸ்வதீம் || 6 ||


ஜனங்களை நல்வழிப்படுத்தும் தலைவரும், ஆராய்ந்து முடிவு செய்வதில் நிபுணரும், தர்மத்தின் பொக்கிஷமாகவும் உள்ள சங்கராசாரியார் ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன்.


सितासितसरिद्रत्नमज्जनं मन्त्रवित्तमम् । दानचिन्तामणिं नौमि निश्चिन्तं नीतिकोकिलम् ॥७ ॥

ஸிதாஸிதஸரித்ரத்நமஜ்ஜநம் மந்த்ரவித்தமம் | தாநசிந்தாமணிம் நௌமி நிஶ்சிந்தம் நீதிகோகிலம் ||7 ||


ஆறுகளில் ரத்தினமாகிய வெண்மை, நீல நிற ஆறுகளில் (கங்கை, யமுனை) நீராடுபவரும், மந்திரம் அறிந்தோரில் மிகச்சிறந்தவரும், கொடையில் சிந்தாமணி போன்றவரும், கவலையற்றவரும், நீதியைப் பாடும் குயிலாகவும் உள்ள ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன்.


सरस्वतीगर्भरत्नं सुवर्णं साहसप्रियम् । लक्ष्मीवत्सं लोलहासं नौमि तं दीनवत्सलम् ॥ ८ ॥

ஸரஸ்வதீகர்பரத்நம் ஸுவர்ணம் ஸாஹஸப்ரியம் | லக்ஷ்மீவத்ஸம் லோலஹாஸம் நௌமி தம் தீநவத்ஸலம் ||8 ||


ஸரஸ்வதி அம்மாளின் வயிற்றில் ரத்தினமாக உதித்தவரும், பொன்போன்ற புகழ் படைத்தவரும், தைரியச்செயல்களில் பிரியமுள்ளவரும், ஸாக்ஷாத் லக்ஷ்மிதேவியின் திருக்குழந்தையும், மனங்கவர் புன்னகையுள்ளவரும், எளியவர்களிடம் பேரன்பு கொண்டவருமான ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன்.

(ஆசாரியாளின் தாயார் பெயர் ஸரஸ்வதி; ஆனால் லக்ஷ்மியின் சேயாகவும் அவர் இருப்பதினால், அவர் தொடுவதெல்லாம் பொன்னாகிறதே.)


गतिं भारतदेशस्य मतिं भारतजीविनाम्। वन्दे यतिं साधकानां पतिमद्वैतदर्शिनाम् ॥९॥

கதிம் பாரததேஶஸ்ய மதிம் பாரதஜீவிநாம்| வந்தே யதிம் ஸாதகாநாம் பதிமத்வைததர்ஶிநாம் ||9||


பாரததேசத்தின் லக்ஷியமாகவும், பாரதீயர்களின் புத்திசக்தியாகவும், அத்வைத வேதாந்த சாதகர்களுக்கு வழிநடத்தும் தலைவராகவும் உள்ள யதீஸ்வரர் ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களை நான் நமஸ்கரிக்கிறேன்.


इति श्रीशङ्करविजयेन्द्रसरस्वतीशङ्कराचार्यस्वामिभिः विरचिता श्री जयेन्द्रसरस्वती श्लोकमालिका.

இதி ஶ்ரீஶங்கரவிஜயேந்த்ரஸரஸ்வதீஶங்கராசார்யஸ்வாமிபிஃ விரசிதா ஶ்ரீ ஜயேந்த்ரஸரஸ்வதீ ஶ்லோகமாலிகா.


சங்கராசாரியார் ஶ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய ஶ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளைப்பற்றிய ஸ்தோத்திரம் முற்றுப்பெற்றது.


ॐ तत् सत्

23 views0 comments
bottom of page